சென்னையில் கடந்த 3 வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகி வருகின்றன.
இந்த நிலையில், கடற்கரை சாலை, அண்ணா சாலை, தியாகராய நகர் மற்றும் அண்ணா நகரில் தொற்று அதிகரிக்க அலுவலகங்களே காரணமாக உள்ளன. 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளதால், தனிமனித இடைவெளி, மாஸ்க் அணியாமல் அலட்சியமாக இருப்பதே இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்,
அலுவலகங்களில் ஒரு கணினியை பலர் பகிர்ந்து பயன்படுத்தும்போது மாஸ்க் அணிவதோடு, கையுறை அணிவதும் அவசியம். இல்லையெனில், ஏற்கெனவே தொற்று பாதித்தவர் பயன்படுத்திய கணினியை மற்றவர்கள் பயன்படுத்தும்போது அவர்களுக்கும் தொற்று பரவக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Discussion about this post