தாய்மொழி, பாரம்பரிய உடை, கலாச்சாரம் ஆகியவை ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமானது என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
தாய்மொழிதான் எப்போதும் முக்கியம் அதன் பின்புதான் பிறமொழிகள் எனவும் மொழியை திணிக்கவும் கூடாது, அதை எதிர்க்கவும் கூடாது என முன்னாள் குடியரசு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை நீலம்பூர் பகுதியில் தனியார் கல்லூரி(PSG) வளாகத்தில் உள்ள அரங்கில் ரோட்டரி மாவட்ட மாநாட்டில் முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். ரோட்டரியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வெங்கையா நாயுடு பதக்கங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு,சேவை துறையான ரோட்டரி மக்களுக்கு சேவை சிறப்பாக செய்து வருகின்றது என தெரிவித்தார்.
மேலும் பேசியவர், “தாய்மொழிதான் முக்கியம், அதன் பின்னர்தான் மற்றவை ,பிறமொழிகளுக்கு எதிரானவன் அல்ல, அதே வேளையில் ஓவ்வொருவருக்கும் தாய்மொழிதான் முதன்மையானது. ராஜ்யசபாவில் அவரவர் தாய் மொழியில்தான் பேச சொல்வேன். தமிழில் வணக்கம் என்பது பொதுவானது, ஆங்கிலத்தில் நேரத்திற்கு ஒரு வார்த்தை இருக்கின்றது. தாய்மொழி, பாரம்பரிய உடை, கலாச்சாரம் ஆகியவை ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமானது.
இயற்கைக்கு எதிராக செயல்பட்டதால் சென்னை கடந்த காலங்களில் மழை பாதிப்புக்கு உள்ளானதை பார்த்தோம். நீர்நிலைகள் ,ஆறுகள் பாதுகாக்கப்பட வேண்டும், ஒவ்வொருவரும் இயற்கைக்கான பங்களிப்பை கொடுக்க வேண்டும்.” என்றார்.
Discussion about this post