ஒரு மாநிலத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த நாட்டின் மனநிலையையும் தீர்மானிக்க முடியாது, கூடாது.
பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை பறிக்க முயற்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் பல நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு முரணாக இருப்பதாகக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், குறிப்பாக பாஜக அல்லாத ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ’இணை ஆட்சியை’ நடத்த காவி கட்சி முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் ‘நியமிக்கப்பட்ட’ ஆளுநர்களின் நடத்தை, நமது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்குவதாக உள்ளது என்று ஸ்டாலின் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
திமுக மட்டுமல்ல, கேரளாவில் சிபிஐ-எம், தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், டெல்லியில் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகள் இந்தப் போக்குக்கு எதிராக குரல் எழுப்பி வருவதாக ஸ்டாலின் கூறினார்.
மேலும், குஜராத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த நாட்டின் மனநிலையை யாரும் தீர்மானிக்க முடியாது, கூடாது என்றும் கூறினார்.
மேலும் தமிழ்நாட்டைப் பற்றி குறிப்பாகப் பேசுகையில், பாஜக கடந்த காலங்களிலும், கடந்த மாநிலத் தேர்தல்களிலும் பிராந்தியக் கூட்டணிகளின் முதுகில் சவாரி செய்து சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. தமிழகத்தில் பாஜக தனித்து ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்றார்.
Discussion about this post