வசந்தகுமார் எம்.பி கொரோனா தொற்று நோய்க்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் நுரையீரலில் தொற்று அதிகாரித்தது. மேலும், நுரையிரலில் சளி அதிகமானதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பாடார்.
வயது மூப்பு காரணமாகவும், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட மற்ற நோய் பிரச்சனை இருந்ததன் காரணமாகவும் நோயின் வீரியம் அதிகரித்து நுரையிரல் செயலிழக்கும் அளவிற்கு சென்றது.
இந்நிலையில் வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வசந்தகுமார் உயிரிழந்ததை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post