நீண்ட நாட்களாக மன அழுத்தம் உடைய சூழலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அது தேவையற்ற கோபம், மனச்சோர்வு, செரிமான பிரச்சனைகள், இதய கோளாறு, தூங்குவதில் பிரச்சனை, தலைவலி மற்றும் உடல் எடை குறைதல் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
வேலை பார்க்கும் அலுவலகத்திலோ அல்லது செய்யும் வேலையினாலும் ஒருவருக்கு ஏற்படும் மன அழுத்தம் ஆனது அவரின் வாழ்க்கையை பல விதங்களில் பாதிக்கக்கூடும்.பொதுவாக இது போன்ற மன அழுத்தம் மிகுந்த சூழலில் வேலை செய்யும் போது கார்டிசால் எனப்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் உடலில் சுரக்கிறது. இது மன அழுத்தத்தை சரிப்படுத்துவதற்கு உதவுகிறது. ஆனால் இந்த கார்ட்டிசால்கள் சுரப்பது அதிக அளவில் நடைபெற்றால் அது உடலில் சில பாதிப்புகளை உண்டாக்க கூடும்.இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க சில குறிப்பிட்ட வழிமுறைகளை கடைப்பிடித்தாலே போதும்.
உங்கள் தூண்டுதல்களை கண்டறியுங்கள் :
எப்போதுமே மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறிதலே மன அழுத்தத்தை குறைப்பதற்கு முதல் படியாக இருக்கும். மேலும் உங்களுக்கு எதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அவற்றை சரி செய்வதுடன் அல்லது எதிர்காலத்தில் அவை ஏற்படாமல் தடுக்கவும் முடியும்.
டீ மற்றும் காபி போன்றவைகளை குடிக்கலாம் :
சூடான ஒரு கப் காபி அல்லது டீயை அவ்வபோது கிடைக்கும் இடைவேளை நேரங்களில் குடிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைவதாக பலர் தெரிவித்துள்ளனர். முக்கியமாக அடுக்கடுக்கான தொடர் அழைப்புகளினாலும், ஒன்றன்பின் ஒன்றாய் நடக்கும் மீட்டிங் ஆகியவற்றினாலும் ஏற்படும் மன அழுத்தத்தையும், உடல்சோர்வையும் இவ்வாறு டீ காபி குடிப்பதால் சரியாவதாக பலர் தெரிவித்துள்ளனர்.
நறுமணப் பொருட்களை பயன்படுத்தலாம் :
சிலருக்கு நறுமண பொருட்களை நுகர்வதன் மூலம் அமைதியான மனநிலை ஏற்படுவதாக பலர் தெரிவித்துள்ளனர். முக்கியமாக வாசனைப் பொருட்களையும் எண்ணெய்களையும் பயன்படுத்தி அவற்றை நுகர்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கும் அரோமோ தெரபி என்னும் சிகிச்சை முறையே வழக்கத்தில் உள்ளது. இதில் பிரபலமான நறுமணப் பொருட்களாகிய லாவண்டர், ரோஸ், சாண்டல் மற்றும் பல சமன்படுத்தப்பட்ட வாசனைப் பொருட்கள் நோயாளிக்கு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் உடல் மனநிலை ஆகியவை முன்னேற்றம் அடைந்துள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர். எனவே வேலையில் நீங்கள் மன அழுத்தத்துடன் உணர்ந்தால் உங்களுக்கு பிடித்த நறுமணப் பொருட்களை நுகர்வதன் மூலம் அதனை சரி செய்யலாம்.
தேவையான அளவு ப்ரேக் எடுத்துக் கொள்ளலாம் :
சில முக்கிய வேலைகள் முடிக்க வேண்டி இருந்தாலும் நீங்கள் மனச்சோர்வாக உணர்ந்தால் உங்களுக்கு தேவையான இடைவேளையை எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. உங்கள் மனதையும் உடலையும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் மேலும் நல்ல செயல் திறனுக்கும் இந்த இடைவேளை உதவும். இடைவேளை நேரங்களில் உங்களுக்குப் பிடித்த பாடல் கேட்பதும் அல்லது மூச்சு பயிற்சி செய்வதும் தியானம் செய்வதும் கூட நீங்கள் செய்து பார்க்கலாம்.
நடைப்பயிற்சி செய்யலாம் :
மன அழுத்தம் அதிகரித்திருக்கும் வேலைகளில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். அதிலும் நன்றாக அமைந்துள்ள இயற்கையான சூழ்நிலையில் நடைபயிற்சி செய்து விட்டு வரும்போது அது உங்கள் மன அழுத்தத்தை போக்கி வேலையில் நன்றாக செயல்பட உதவும்.
யோகாசனம் செய்யலாம் :

நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பதால் ஏற்படும் உடல் வலியை போக்குவதற்கு சில எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மேலும் அவ்வபோது கிடைக்கும் சிறிய இடைவேளைகளில் யோகாசனங்களை மேற்கொள்வதன் மூலம் மனமும் உடலும் ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ள முடியும்.
4-7-8 என்ற மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம் :
உங்கள் நாக்கின் நுனியை வாயில் முன்பகுதியில் உள்ள மேல்பக்க பல்லின் மேல் சற்று அழுத்திக்கொண்டு மூக்கின் வழியாக 4 நொடிகள் வரை மூச்சை உள்ளே எடுக்க வேண்டும். பிறகு 7 நொடிகள் வரை மூச்சை அடக்கி பின்பு 8 நொடிகள் வரை வாயின் வழியாக மூச்சை வெளியிட வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்வதால் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் அதிகமாக கிடைப்பதோடு உடலும் மனமும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.
Discussion about this post