சென்னை:
திமுக கழக அமைப்பில் உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டள்ளனர்.
திமுக-வின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. 72 கழக மாவட்டங்களுக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் நேற்று திமுக சார்பில் 15வது பொதுத்தேர்தல் தொடர்பான பட்டியல் வெளியானது.
சென்னை மாவட்ட செயலாளர்கள் சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளராக மயிலை த வேலு, சென்னை மேற்கு மாவட்ட செயலாளாராக நே சிற்றரசு, சென்னை கிழக்கு மாட்ட செயலாளராக பிகே சேகர்பாபு, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளாராக மாதவரம் எஸ் சுதர்சனம், சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக தா இளங்கோ என்ற இளைய அருணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
மாற்றம் செய்த இடங்கள் இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த மூர்த்திக்கு பதில் செந்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக செங்குட்டுவனுக்கு பதில் பர்கூர் மதியழகன், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வரதராஜனுக்கு பதில் தளபதி முருகேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த ராமச்சந்திரனுக்கு பதில் ரவி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த பூபதிக்கு பதில் சந்திரன், தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த இன்பசேகரனுக்கு பதில் அமமுகவிலிருந்து வந்த பழனியப்பன், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த ஏனாதி பாலசுப்பிரமணியத்திற்கு பதில் அண்ணாதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Discussion about this post