தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு விநாயகர் சதூர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலம் எடுத்து செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 22.8.2020 அன்று கொண்டாடப்பட உள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் சுருதியும், பொது இடங்களில் விநாயகர சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ அச்சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலிலேயே கொண்டாட அறிவறுத்தப்படுகிறது.
சிறிய திருக்கோவில்களில், பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலைமில் அத்தகைய திருக்கோவில்களில் வழிபாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்கமாறு பொதுமக்களும், திருக்கோவில் நிர்வாகமும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post