சென்னை:
மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மல்டி ஸ்டார் படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே 125 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காத்திருக்கும் இந்தியத் திரையுலகம் தமிழ்த் திரையுலகின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன், மணிரத்னம் இயக்கத்தில் தற்போது சாத்தியமாகியுள்ளது.
ரிலீஸ் முன்பே 125 கோடி வசூல்:
லைகா தயாரிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’, பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகிறது. இதனால், இந்தப் படத்தின் ஓடிடி(OTT) உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக முன்னணி ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம், பொன்னியின் செல்வன் உரிமையை வாங்கியது. குறிப்பாக 125 கோடி ரூபாய்க்கு பொன்னியின் செல்வன் வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு பாகங்களையும் வங்கிய அமேசான்:
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், 2ம் பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் சேர்த்து 125 கோடி ரூபாய்க்கு அமேசான் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரிலீஸ்க்கு முன்பே 100 கோடி வசூலை எட்டியுள்ளதால், திரையரங்குகளில் வசூல் தாறுமாறாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
சேட்டிலைட் உரிமைக்கும் கோடிகள் வியாபாராம்:
பொன்னியின் செல்வன் ஓடிடி உரிமை 125 கோடிக்கு விற்பனையானதாக வெளியான தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே படத்தின் சேட்டிலைட் உரிமைக்கும் கடுமையான போட்டி நிலவியதாகவும், இப்போது முன்னணி தனியார் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஓடிடி உரிமை போன்றே இங்கேயும் பல கோடிகளுக்கு பிஸினஸ் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post