- 1056 – பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது.
- 1057 – பைசாந்தியப் பேரரசர் ஆறாம் மைக்கேல் பிரிங்காசு ஒரே ஒரு ஆண்டு ஆட்சியின் பின்னர் கடத்தப்பட்டார்.
- 1314 – நார்வே மன்னர் ஐந்தாம் ஆக்கோன் தலைநகரை பேர்கனில் இருந்து ஒசுலோவுக்கு மாற்றினார்.
- 1422 – இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் என்றி பிரான்சில் இருக்கும் போது இரத்தக்கழிசல் நோயினால் இறந்தார். அவரது மகன் ஆறாம் என்றி தனது 9-ஆம் மாதத்தில் இங்கிலாந்து மன்னனாக முடி சூடினான்.
- 1782 – திருகோணமலையை பியேர் அந்திரே டி சியூஃபெரென் தலைமையிலான பிரெஞ்சுப் படையினர் ஒல்லாந்தருக்காகக் கைப்பற்றினர்.[1]
- 1795 – முதலாவது கூட்டமைப்புப் போர்: திருகோணமலையை பிரெஞ்சுக்காரர் கைப்பற்றாமல் தடுக்கும் பொருட்டு அந்நகரை ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.
- 1798 – பிரான்சின் உதவியுடன் அயர்லாந்துக் கிளர்ச்சிவாதிகள் கொன்னாக்டுக் குடியரசு என்ற நாட்டை உருவாக்கினர்.
- 1858 – பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டது.[1]
- 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியப் படைகள் வில்லியம் செர்மான் தலைமையில் அட்லான்டா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1876 – உதுமானிய சுல்தான் ஐந்தாம் முராட் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் இரண்டாம் அப்துல் அமீது ஆட்சியில் அமர்த்தப்பட்டான்.
- 1886 – அமெரிக்காவில் தென்கிழக்கு தென் கரொலைனாவில் சார்ல்ஸ்டன் நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 60 பேர் உயிரிழந்தனர்.
- 1888 – கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது.
- 1897 – தாமசு ஆல்வா எடிசன் கினெட்டஸ்கோப்பு என்ற முதலாவது திரைப்படம் காட்டும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1907 – ஆங்கிலேய-உருசிய ஒப்பந்தம்: வடக்குப் பாரசீகத்தில் உருசியாவின் ஆக்கிரமிப்பை ஐக்கிய இராச்சியமும், தென்கிழக்கு பாரசீகம், மற்றும் ஆப்கானித்தானில் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பை உருசியாவும் அங்கீகரித்தன. திபெத்து மீது இரு வல்லரசுகளும் தலையிடுவதில்லை என முடிவெடுத்தன.
- 1918 – முதலாம் உலகப் போர்: நூறு நாட்கள் குற்றம்: ஆத்திரேலியப் படைகள் செயிண்ட்-குவெண்டின் மலைப் போரில் வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டன
Discussion about this post